பிரபல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.., அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்? அப்ப டிஆர்பி அவ்வளவு தானா?பிரபல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.., அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்? அப்ப டிஆர்பி அவ்வளவு தானா?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் மக்களை கவர்வதற்கு புது புது தொடர்களை டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். இதில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி மக்களின் மனதை கொள்ளை கொண்ட சீரியல் என்றால் அது மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் மலர் தொடர் தான். சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகர் அக்னி திடீரென சீரியலை விட்டு விலகினார்.

அவருடைய இடத்தை தற்போது தான் தயாரிப்பு நிறுவனம் நிரப்பியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு முக்கிய நடிகர் மலர் சீரியலில் இருந்து வெளியேற போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை, ஹீரோவுக்கு அப்பாவாக நடித்த நடிகர் ரவிகாந்த் தான் சீரியலில் இருந்து விலகுவதாக ஷாக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, எனக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்து கொண்டே இருந்தனர்.

நான் வெளியே வந்ததற்கு முக்கிய காரணம் தயாரிப்பு நிறுவனத்தின் அட்மின் மற்றும் அக்கவுண்டன்ட் வேலை பார்ப்பவர்கள் தான். சம்பளம் கேட்டு கால் செய்தால் போனை அட்டென்ட் செய்ய மாட்டர்கள், திரும்பவும் போன் செய்ய மாட்டார்கள். அதனால் தான் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன். சம்பளம் தரவில்லை என்று தான் விலகுகிறேன், வேறு எந்த ரூமர்ஸை கிளப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரோலில் நடிக்க மூன்று பெரிய நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

பார்டா.., எதிர் நீச்சல் சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.., தளபதியின் GOAT படத்தில் இணைந்து அசத்தல் – வெளியான முக்கிய போட்டோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *