மறைந்த விஜயகாந்த் நெருங்கிய சொந்தத்திடம் ரூ.43 கோடி மோசடி - ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய கும்பல்!!மறைந்த விஜயகாந்த் நெருங்கிய சொந்தத்திடம் ரூ.43 கோடி மோசடி - ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய கும்பல்!!

மறைந்த விஜயகாந்த்

மறைந்த பிரபல நடிகரும், தேமுதிக கட்சி முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் தான் எல்.கே.சுதீஷ். இவரும் அதே கட்சியில் முக்கிய பொறுப்பில் வகித்து வருகிறார். அவருடைய மனைவியான பூர்ண ஜோதி என்பவர் தற்போது சென்னை காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, ” கடந்த 2014ம் ஆண்டு எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமான  2.10 ஏக்கர் காலியிடம் சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் இருந்த நிலையில், அதில் சென்னையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (44) என்பவர் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்து தருவதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி அதில் கட்டப்படும் வீட்டின் 78 வீடுகள் நிலம் சொந்தக்காரரான எங்களுக்கும், மீதி 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் எனக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளில் சுமார் 48 வீடுகளை எனக்கு தெரியாமல் என்னுடைய கையெழுத்தை போலியாக ரெடி செய்து விற்பனை செய்தது மட்டுமின்றி அதன் மூலம் கிட்டத்தட்ட  ரூ.43 கோடி மோசடி செய்துள்ளனர். இதற்கு தொடர்புடைய சந்தோஷ் சர்மா, சாகர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரித்த நிலையில், இருவரில் ஒருவரான சர்மா என்பவர் ஒரே வீட்டை பல பேருக்கு விற்றது தெரியவந்தது.

மீண்டும் டிஆர்பியை எகிற விட்ட எதிர்நீச்சல்.., முந்தியடிச்சு முன்னுக்கு வந்த சிறகடிக்க ஆசை சீரியல்.., TRP-யில் புதிய மாற்றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *