விஜய் படத்தில் அவ்வளவு கெஞ்சினேன்., கட்டாயப்படுத்துனாங்க., அதா அதை செஞ்சேன்.., நடிகை கிரண் ஓபன் டாக்!!விஜய் படத்தில் அவ்வளவு கெஞ்சினேன்., கட்டாயப்படுத்துனாங்க., அதா அதை செஞ்சேன்.., நடிகை கிரண் ஓபன் டாக்!!

நடிகை கிரண் விஜய்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோர். இவர் நடிப்பில் வெளியான ஜெமினி, அன்பே சிவம், திவான் மற்றும் வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சுருங்க ஆரம்பித்த நிலையில், கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்தார். அதன்படி தற்போது தியேட்டரில் ரீ ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்த “திருமலை” படத்தில் “வாடியம்மா ஜக்கம்மா” என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதன்பிறகும் வாய்ப்பு கிடைக்காததால் கோவாவில் செட்டிலானார்.

மேலும் தன்னுடைய கவர்ச்சி படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமலை படத்தில் நடித்ததன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர்,” விஜய் நடித்த திருமலை படத்தில் பாடலுக்கு நடனமாட அழைப்பு வந்த போது ஓகே சொன்னேன். ஆனால் அவர்கள் கொடுத்த ஆடை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை போட்டுக் கொண்டால்  வயிற்று பகுதி அப்படியே தெரிந்தது. அதனால் அதை போட மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் அங்கிருந்தவர்கள் யாரும் கேட்கவில்லை. ஆனால் மனமில்லாமல் தான் நடித்தேன். இப்போது அந்த பாடல் செம்ம ஹிட் என்று கூறியுள்ளார்.  

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பெண் யூடியூபர்.., கடைசியில் டிவிஸ்ட் கொடுத்த காவல்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *