திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? ஸ்டாலின் என்ன செய்தார்? கொந்தளித்த நடிகை குஷ்பு!!திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? ஸ்டாலின் என்ன செய்தார்? கொந்தளித்த நடிகை குஷ்பு!!

பிரபல நடிகையும், பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வரும் குஷ்பு, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவை புரட்டி போட்ட செய்தி என்றால் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், மருமகள் வீட்டு வேலைக்காரியை கொடுமை படுத்திய சம்பவம் பற்றி தான். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குஷ்பு பேசியுள்ளார்.

அதாவது கோவில்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், சென்னை சிந்தாதிர்ப்பேட்டை உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் குஷ்பு சுத்தம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எம்.எல்.ஏ வீட்டில் அந்த வேலைக்கார பெண்ணுக்கு நடந்த அநீதியை தமிழக முதல்வர் எட்டி கூட பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மக்களே உஷாரா இருங்க.., மீண்டும் அமலுக்கு வந்த 144 தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *