துபாயில் ரூ.50 கோடிக்கு வீடு?., இதுக்காக தான் பணம் வாங்கினேன்?.., உண்மையை உடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!!துபாயில் ரூ.50 கோடிக்கு வீடு?., இதுக்காக தான் பணம் வாங்கினேன்?.., உண்மையை உடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!!

நடிகை நிவேதா பெத்துராஜ்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருந்த நடிகை நிவேதா பெத்துராஜ், சமீப காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் பேட்மிண்ட் போட்டியில் முதல் பரிசை வாங்கினார். இந்நிலையில் இவர் பல பேரிடம் வீடு, பணம் வாங்கியதாக சோசியல் மீடியாவில் செய்திகள் தீயாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த செய்திகள் குறித்து உண்மையை உடைத்து தனது X  பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,” கடந்த சில நாட்களாக பிரபலங்களிடம் நான் வீடு வாங்கினேன், காசு வாங்கினேன் என்று பொய்யான செய்திகள் பரவி வருகிறது. இதுவரை நான் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அதெல்லாம் தானாக தேடி வந்த வாய்ப்புகள், நானாக சென்று யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை.

2006ல் துபாயில் வாடகை வீட்டில் குடி இருந்த நான், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்த நிலைமைக்கு வந்துளேன். சினிமாவை பொறுத்த வரை நான் கண்ணியமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்துளேன். அதுமட்டுமின்றி  இதுவரை என்னை பற்றி வெளியான எந்த தகவலும் உண்மை இல்லை. தவறான செய்திகள் வெளியானாலும் மனிதநேயம் ஒன்று இருப்பதால் நான் இதுவரை அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் வெளியான செய்திகள் என்னையும் என் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.மேலும் பத்திரிகை துறையில் இன்னும் மனித நேயம் இருக்கிறது என்று நம்புகிறேன்.இனிமேல் பொய்யான செய்திகளை பத்திரிகையாளர்கள் பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள்” என்று கூறியுள்ளார். 

எப்பா., அது கைபுள்ளப்பா.. 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொடூர கொலை – இதயத்தை ரணமாக்கும் தந்தையின் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *