நாட்டிய பேரொளி பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா? இப்போது என்ன செய்கிறார்  தெரியுமா?நாட்டிய பேரொளி பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா? இப்போது என்ன செய்கிறார்  தெரியுமா?

திரையுலகில் நாட்டிய பேரொளி பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா: தமிழ் சினிமாவில் 70ஸ், 80ஸ் காலகட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக பிரபலமாக இருந்தவர் தான் நாட்டிய பேரொளி பத்மினி. தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட அவர் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அதில் 59 படங்கள் சிவாஜியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பையும் தாண்டி தகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற நடனக்கலைகளிலும் பெயர் போனவர்.  17 வயதில் கல்பனா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு என்று தனிப்பட்ட சாம்ராஜ்ஜியத்தையும் உருவாக்கி கொண்டார்.

தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வந்த அவர், ராமச்சந்திரன் என்ற மருத்துவரை கடந்த 1961ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிரேமானந்த் என்ற மகன் இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த 1981 ம் ஆண்டு தனது கணவனை இழந்த அவர், தனது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று கெரியரை தள்ளி வைத்து மகனுக்காக வாழ தொடங்கினார்.

Also Read: “தளபதி 69” படத்தில் இணைந்த பிரபல நடிகை – பலரும் எதிர்பார்த்த காம்போ வந்தாச்சு!

அதன்பின்னர் கடந்த 2006ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பத்மினியுடன் தனது மகன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பிரேமானந்த்  தனது தாயை போல பெரிய ஒரு நடிகராக வலம் வராமல், தற்போது இவர் உலகப் புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிகையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *