தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு அது இருக்காது.., ரொம்ப மோசம்.., ரஜினி பட நடிகை வேதனை!!தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு அது இருக்காது.., ரொம்ப மோசம்.., ரஜினி பட நடிகை வேதனை!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இதற்கு முன்னர்  பாலிவுட்டில் அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அங்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், ” மற்ற சினிமா துறைகளை விட தெலுங்கு திரையுலகம் தான் ரொம்ப மோசம்.

அங்கு நடிகைகளுக்கு மரியாதை இல்லை. ஆணாதிக்கம் தான் அதிகம். சொல்ல போனால் அதை எல்லாராலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கவும்  முடியாது. அந்த அளவுக்கு நடிகைகளை மோசமாக நடத்துகிறார்கள். குறிப்பாக நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை பெண்களை மதிப்பதே இல்லை. நான் அங்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன்” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

வீல் சேர் கொடுக்க லேட்.., ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்.., நடந்தது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *