இளம்வயதில் சாவை தேடிக்கொண்ட பிரபல நடிகைகள்.., இவங்க மட்டும் இருந்திருந்தா சினிமா எங்கயோ போயிருக்கும்!!இளம்வயதில் சாவை தேடிக்கொண்ட பிரபல நடிகைகள்.., இவங்க மட்டும் இருந்திருந்தா சினிமா எங்கயோ போயிருக்கும்!!

சினிமாவில் என்னதான் நடிகர் நடிகைகள் ரெக்க கட்டி பறந்தாலும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைகளிலும் பல வித சோகங்கள் இருக்க தான் செய்கிறது. அதையும் மீறி சிலர் சினிமாவில் உச்சத்தை தொட்டவர்களும் இருக்கிறார்கள். மண்ணோடு சரிந்தவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு சில படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துவிட்டு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சிறுவயதிலே தங்களது முடிவுகளை தானே தேடிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இளம் வயதில் உயிரை மாய்த்து கொண்ட நடிகைகள் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இவரை பற்றி தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. பிரபல நடிகை சிம்ரனின் தங்கையான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி கொண்டார். சிம்ரனையே பீட் செய்யும் அளவுக்கு படங்களில் நடித்து வந்த அவர் காதலின் தோல்வியால் மனம் உடைந்து தனது 21 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சினிமாவுக்குள் நுழைந்த கொஞ்சம் காலத்தில் நல்ல நிலைமைக்கு வந்த நடிகை படாபட் ஜெயலட்சுமியை சுகுமார் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிய வர அந்த துரோகத்தை தாங்க முடியாமல் தனது 22 வயதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனு நீதி, தவசி உள்ளிட்ட படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த நிலையில், தனது 20 வயதில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் சக நண்பரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவருடைய தாயார் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படையப்பா, அருணாச்சலம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர் பாஜக கட்சிக்காக ஒட்டு கேட்கும் சமயத்தில் ஹெலிகாப்டர் வெடித்து உயிரிழந்தார். ஆனால் அவருடைய மரணம் தற்போது வரை ஒரு புதிராகவே இருக்கிறது. இவர் இறக்கும் போது அவருக்கு வயது 31 குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை சென்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து கல்யாணம் வரை சென்ற நிலையில் திடீரென ஹோட்டல் ரூமில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பிளான் பண்ணி கொலை என சித்ரா பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். சித்ரா இறக்கும் போது அவருக்கு வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *