அதிகமான வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு.., ADMK முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு., பரபரப்பில் அதிமுகவினர்!!அதிகமான வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு.., ADMK முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு., பரபரப்பில் அதிமுகவினர்!!

ADMK முன்னாள் அமைச்சர்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி விறுவிறுப்பாக ஏழு கட்டமாக ஆரம்பமாக இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தான் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம்  தீவிரமாக இருந்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம் வேலூரில் உள்ள ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான கஜேந்திரனை அவர் அறிமுகம் செய்து வைத்து கட்சிக்காரர்களுக்கு ஒரு செய்தியை கூறினார். அதாவது அதிகமான வாக்குகள் வாங்கித்தரும் கட்சிக்காரர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தெளிவாக சொல்ல போனால், 6 சட்டமன்ற தொகுதிகளில் எந்தத் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத் தருகிறார்களோ அந்த தொகுதியின் மாவட்ட ஒன்றிய கிளை செயலாளர்களுக்கு பத்து சவரன் தங்கம் வழங்கப்படும் என்று கூறினார். இந்த அறிவிப்பு அதிமுகவினர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய நிலையில், அதிக வாக்குகளை பெற்று தர தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *