நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் - இந்த நேரத்தில் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!!நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் - இந்த நேரத்தில் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!!

நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம்: தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக மற்ற நாட்களை ஓப்பிடும் போது அக்னி நட்சத்திரம் நாட்களில் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில்  100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் அதிகமாக இருக்கும். மேலும் அக்னி நட்சத்திரம் நாளை (மே 4)  தொடங்கி மே 28 உடன் முடிவடைகிறது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தின் அளவு பதிவாகும். அதே போல  மதுரை, சேலம், கரூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டெரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11:00 முதல்  பகல்  3:00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் வெளியே அலைவதையும் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம்  பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல் – அரசு பஸ் டிரைவர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *