திருச்சியில் அதிமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி - தீவிர விசாரணையில் பறக்கும் படையினர்!!திருச்சியில் அதிமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி - தீவிர விசாரணையில் பறக்கும் படையினர்!!

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதிமுக பிரமுகர் வீட்டில் ஒரு கோடி கணக்கில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் நாள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேர்தலை முன்னிட்டு மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் உரிய ஆவணம் இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என்ற நோக்கத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டிற்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அதாவது அந்த அரசியல் பிரமுகர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் உடனே அங்கு சென்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி ஒரு பையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. எனவே இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். மேலும் அந்த பிரமுகர் அதிமுகவை சேர்ந்தவர். எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த பணம் பட்டுவாடா பணமாக இருக்கலாம் என தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை செய்து வருகிறது.

மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *