அதுக்கு தனுஷ் தான் காரணம்?.., டைவர்ஸ் பிறகு முதன் முதலாக வாயை திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!அதுக்கு தனுஷ் தான் காரணம்?.., டைவர்ஸ் பிறகு முதன் முதலாக வாயை திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் மகளும் முன்னணி இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளன. பல வருடங்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதிகாரபூர்வமாக விவாகரத்து வாங்காமல் இருந்து வருவதால் இவர்கள் கண்டிப்பாக மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆங்கர் ஒருவர் நீங்கள் அறிமுகப்படுத்திய அனிருத் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார், உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர், ” இதற்கு காரணம் நான் இல்லை தனுஷ் தான். அவர் தான் அனிருத்குள் இருந்த திறமையை கண்டறிந்தார். வெளிநாட்டுக்கு செல்ல இருந்த அவனை இழுத்து பிடித்து கீபோர்டு வாங்கி கொடுத்து அழகு பார்த்தார். மேலும் 3 படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் சரி என்று சொன்னேன். அவரால் தான் அனிருத் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது என்று கூறினார். விவாகரத்துக்கு பிறகு தனுஷை பற்றி ஐஸ்வர்யா பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *