அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்!அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்!

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? – கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் அம்பலவாணன் பேட்டை என்ற கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிலர் மர்ம நபர்கள் அங்கு வந்து அம்பேத்கர் சிலை மீது  பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது வெடித்தது. அதிர்ஷ்டவசமாக சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

மேலும் பெட்ரோல் குண்டு சத்தத்தை கேட்டு அங்கிருந்த மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணையை தொடங்கினர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

மக்களே உஷார் – வெப்ப அலை வீசும் – இந்த நேரத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *