அனாமிகா சன் டிவி சீரியல் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு !அனாமிகா சன் டிவி சீரியல் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு !

   அனாமிகா சன் டிவி சீரியல் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு. சன் டிவியில் பிரோமோ வெளியாகி நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது சீரியல் வருகின்ற நவம்பர் மாதம் முதல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

சன் டிவி அனாமிகா சீரியல் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு !

அனாமிகா சன் டிவி சீரியல்

அனாமிகா & சன் டிவி :

    அனாமிகா என்னும் புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்ற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. சன் டிவியில் ப்ரோமோ மட்டும் வெளியாகி விரைவில் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ப்ரோமோ வெளியாகிய இரண்டு வாரத்திற்குள் சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் வெளியாகி விடும். ஆனால் நான்கு மாதங்களாகியும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

JOIN WHATSAPPCLICK HERE

திகில் ப்ரோமோ :

   அக்ஷிதா தேஷ்பாண்டே , தர்ஷக் கவுடா , ஆகாஷ் பிரேம் குமார் ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

  1. அக்ஷிதா தேஷ்பாண்டா – அனாமிகா 

  2. ஆகாஷ் பிரேம் குமார் – நந்தா 

  3. தர்ஷக் கவுடா – ரிஷி 

நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நல்ல இருக்கணும் என்று நினைக்கின்றார் அனாமிகா. சிறு வயதில் இருந்தே ஆசைப்படுவது நல்லது என்பது கிடையாது என்று வளர்க்கப்படுகின்றார் நந்தா. நாம் செய்வது நல்லதோ கெட்டதோ ஆசைப்படுவதை செய்ய வேண்டும் என்று வாழ்கின்றார் ரிஷி. வாழ்க்கையில் விதி இவர்கள் மூன்று பேரையும் வைத்து விளையாடுகின்றது. ஒரு திகில் கலந்த கதையாக அனாமிகா ப்ரோமோ வெளியாகியது.

Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

சீரியல் வெளியீடு :

   அனாமிகா சீரியல் குழுவின் சார்பில் சீரியல் இரவு நேரத்தில் ஒளிபரப்ப வேண்டுகோள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இரவு நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கள் எதுவும் முடியும் படியாக இல்லை. மேலும் சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியல் வரும் வாரங்களில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. திகில் கலந்த கற்பனை கலந்த கதையாக அனாமிகா சீரியல் வெளியாக இருக்கின்றது. எனவே அனாமிகா சீரியல் வருகின்ற நவம்பர் மாதத்தில்இரவு 10 மணிக்கு மேல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

அனாமிகா சீரியல் வெளியாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் சீரியல் நவம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சீரியல் இரவு நேரம் என்பதால் சீரியலின் TRPல் முதல் இடத்தில் வர வாய்ப்புகள் இருக்கின்றது.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *