மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வீட்டுல நடந்த விசேஷம் -  சிம்பிளாக முடிந்த கொள்ளு பேத்தி திருமண நிச்சயதார்த்தம்!!மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வீட்டுல நடந்த விசேஷம் -  சிம்பிளாக முடிந்த கொள்ளு பேத்தி திருமண நிச்சயதார்த்தம்!!

முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வீட்டுல நடந்த விசேஷம்: தமிழ் நாட்டில் எந்தவொரு நபரும் விமர்சிக்காத ஒரு தலைவர் என்றால் அது பேரறிஞர் அண்ணா தான். அரசியல் என்ற ஒன்று இருக்கும் அண்ணாதுரை என்ற வரலாறும் கண்டிப்பாக இருக்கும். பல தடவை முதல்வராக இருந்து வந்த அண்ணாவை பற்றி பேச இந்த ஒரு நாள் போதாது. இந்நிலையில் அண்ணாதுரை வீட்டில் ஒரு விசேஷம் நடைபெற்றுள்ளது.

அதாவது,  பேரறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தியான பிரித்திகா ராணி 2020-ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது ஸ்பெயின் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இப்பொழுது அவளுக்கு தான் கல்யாணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அதாவது, பிரித்திகா ராணி ஐ.ஏ.எஸ் அதிகாரியான மதுரையை சேர்ந்த சித்தார்த் பழனிசாமி என்பவருக்கும் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பயிற்சியின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

Also Read: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா?

சித்தார்த் தற்போது ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் திருமணம் நிச்சயம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்றும் அந்த நிகழ்விற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *