ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?

ஏ.ஆர்.ரகுமான்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான்  ஏ.ஆர்.ரகுமான். பல விருதுகளை வென்று குவித்த அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படத்தில் இசையமைத்திருந்தார். இப்படம் சுமாராக ஓடிய நிலையில், இன்று ஆடி காரில் வந்து ஆட்டோவில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்னும் தர்காவில் 450 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி பாக்தாதி என்பவர் இறந்த பிறகு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரின் நினைவாக வருடந்தோறும் சந்தனக்கூடு கந்தூரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விழாவிற்கு உலக புகழ் பெற்ற ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கு அதிக கூட்டம் சுற்றி திரிந்ததால் ஆடி காரில் வந்த அவர் திடீரென ஆட்டோவில் ஏறி சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *