ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு உண்டா? காவல்துறை தீவிர விசாரணை!!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு உண்டா? காவல்துறை தீவிர விசாரணை!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை பெரம்பூரில்  கடந்த மாதம் 5ஆம் தேதி  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், காவல்துறை குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டியது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி பக்கம் சென்ற நிலையில் கூலிப்படையினர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். மேலும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். armstrong murder case

சில நாட்களுக்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியதில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரையும் காவல்துறை கைது செய்து ரகசியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் திரைப்பட இயக்குனர் நெல்சன் மனைவியையும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. director nelsons wife

Also Read: ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு – இந்த பகுதிக்கு செல்ல தடை – வனத்துறையினர் அறிவிப்பு!

அதாவது, ” ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு நெல்சனின் மனைவி அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் தான் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அடுக்கட்டமாக நெல்சனிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட் பக்கத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. armstrong murder case

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *