
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் இருக்கும் அவர் தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட சென்ற போது வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட ௨௫ பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
அதன்படி பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சல், காங். முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி உள்ளிட்ட 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது இந்த செய்தி இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி