அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை  அமலாக்கத்துறை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதையடுத்து  அவர் சிறையில் இருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார். அதன்பின்னர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலின் பிரச்சாரத்திற்காக ஜாமீனில் வெளியே வந்தார்.

தேர்தல் முடிந்த பிறகு, திகார் சிறைக்கு சென்ற நிலையில் இன்னொரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வைத்து சிபிஐ கைது செய்தது. மூன்று நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.

Also Read: காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மறைவு – அரசியலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!

அப்போது மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *