துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை - தீவிர விசாரணையில் போலீஸ்!!துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை - தீவிர விசாரணையில் போலீஸ்!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு நகைக்கடையை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று  4 மர்ம நபர்கள் காரில் வந்து கடைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளரை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டி போட்டனர்.

இதையடுத்து துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவர் போலீசிடம் தகவல் தெரிவிக்க,  சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்களே – பூத் சிலீப் இல்லனாலும் வாக்களிக்கலாம்  – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *