கல்யாணத்திற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., ரசிகர்கள் வாழ்த்து!!!கல்யாணத்திற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., ரசிகர்கள் வாழ்த்து!!!

பாக்கியலட்சுமி நடிகை

விஜய்  டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். பாக்கியலட்சுமி கணவன் கோபி ராதிகாவை 2வது திருமணம் செய்து தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினாலும், சொந்த காலில் உழைத்து நாலு பேர் பேசும் படி வாழ வேண்டும் என்று ஒரு ஹோட்டலை தொடங்கியுள்ளார்.

இந்த ஹோட்டலை இழுத்து மூடுவதற்கு கோபி பல வேலைகளை பார்த்து வருகிறார். இப்படி தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையில் பாக்கியலட்சுமி இரண்டாவது மகனான எழில், ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையுடன் இருக்கும் அமிர்தா என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

அவர்கள் சந்தோஷமாக வாழ்க்கையை கழித்து வந்த நிலையில் அமிர்தாவின் முன்னாள் கணவன் உயிரோட வர பல திருப்பு முனைகளை சந்தித்தது இந்த சீரியல். இந்த அமிர்தா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தது குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ரித்திகா தான். இவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், தற்போது குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது நடிகை ரித்திகா  தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *