வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ! மீறினால் 500 முதல் 1500 வரை அபராதம் ! இன்று முதல் அமலாவதாக காவல்துறை அறிவிப்பு !வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ! மீறினால் 500 முதல் 1500 வரை அபராதம் ! இன்று முதல் அமலாவதாக காவல்துறை அறிவிப்பு !

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை. தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஊடகம், காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் துறை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை தவிர வேறு எந்த வகையான ஸ்டிக்கர்களும் ஓட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஸ்டிக்கர் இருந்தால் முதல் முறை ரூ.500 அபராதமாகவும், 2வது முறை நடவடிக்கை எடுக்கப்பட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நம்பர் பிளேட்டில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்ற ஏற்கனவே போலீஸ் அறிவுறுத்திய நிலையில் தற்போது இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா – காரணம் இது தானா? வெளிவந்த பகீர் பின்னணி!

மேலும் நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் ஆகியவை எதுவும் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *