இப்படி கூட சாவு வருமா?., ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீதமாக விளையாடிய நண்பன் - குடல் வெடித்து இளைஞர் மரணம்!இப்படி கூட சாவு வருமா?., ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீதமாக விளையாடிய நண்பன் - குடல் வெடித்து இளைஞர் மரணம்!

இளைஞர் ஒருவர் தனது நண்பனின் ஆசனவாயில் காற்று அடித்து விளையாடும் போது அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் யோகேஷ் (28). இவர் பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பணிக்கு செல்லும் போது இருசக்கர வாகனம் பழுதடைந்த நிலையில்,  சர்வீஸ் செய்வதற்காக அவருடைய நண்பர் முரளி வேலை பார்க்கும்  சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ்க்கு விட்டுள்ளார். இந்நிலையில் சர்வீஸ் சென்டரில் இருக்கும் ஏர் பிரஷர் பைப்பை வைத்து இருவரும் விளையாட கொண்டிருந்தனர்.

அதாவது முரளி, யோகேஷ் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் காற்று அடித்து விளையாடிய தொடங்கிய நிலையில், விபரீத இடத்தில் காற்று அடித்து விளையாடியுள்ளனர். அதன்படி ஆசனவாயில் உயர் அழுத்த காற்றை செலுத்தியுள்ளார். யோகேஷ் வயிறு பெரிதாக மாறி, குடல் வெடித்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து முரளியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

நேற்று விக்கெட்டில் சதம் விளாசி சாதனை படைத்த KKR வீரர்.., ஆனா CSK வீரரை தொட கூட முடியாது போலயே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *