யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!

தமிழ் சினிமாவில் களவாணி, மெரினா, மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான்  நடிகை ஓவியா. அதன் பிறகு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார் .மேலும் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜபீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு துணிச்சலாக பதிலளித்துள்ளார். அட்ஜெஸ்மெண்ட் குறித்து அவர் கூறியதாவது, “சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினை என்பது எப்போதும் இருக்கின்ற பிரச்சனை தான்.

ஆனால் இப்போது பெருமளவில் சினிமா  வளர்ச்சி அடைந்து விட்ட நிலையிலும்  நடந்து கொண்டு இருக்கிறது என்பது வேதனையான ஒன்று. ஆனாலும் இந்த பிரச்சனை மட்டும் ஓயவில்லை. எல்லா இடத்திலும் பெண்கள் அனுசரிக்க சொல்கிறார்கள். இதற்கு பெண்கள் அப்பொழுதே பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் வேறு எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இந்த விஷயத்தில் உடனே ரியாக்ஷன் கொடுத்தால் மட்டுமே பிரச்சினையே வராது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதுவாக இருந்தாலும், நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பண்ணவே கூடாது. அவ்வாறு  செய்து கிடைக்கும் பலன் தேவையே இல்லை என்றும்  நிறைய பேர் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். சினிமா பாதுகாப்பான துறைதான் இருந்தாலும்  நாம் தைரியமாக இருக்க வேண்டும். நம்மை நாமே தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ‘நோ’ சொல்ல தெரிய வேண்டும். இல்லை என்றால் நம்மிடம் எல்லை மீற தான் செய்வார்கள். யாரும் நம்மை ஏமாற்ற விடக்கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

சாரி டாடி.., ரெண்டே வருஷத்துல கேள்வி குறியான வாழ்க்கை? ராஜ்கிரண் பேச்சை மீறி கல்யாணம் செய்த மகளுக்கு நேர்ந்த சோகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *