படவாய்ப்பு கிடைக்கலன்னா என்ன?.., அந்த தொழிலை கையில் எடுத்த பிக்பாஸ் யாஷிகா., இத எதிர்பார்கலையே மேடம்!!படவாய்ப்பு கிடைக்கலன்னா என்ன?.., அந்த தொழிலை கையில் எடுத்த பிக்பாஸ் யாஷிகா., இத எதிர்பார்கலையே மேடம்!!

புது பிசினஸ்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான்  நடிகை யாஷிகா ஆனந்த். சிறுவயதில் இருந்து நடித்து வரும் இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கினார். ஆனால் அந்த படம் சுமாராக ஓடி இருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இருட்டறையில் முரட்டு குத்து என்ற 18+ படத்தில் நடித்த நிலையில், அதில் அவர் பேசிய வசனங்களுக்கு பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஏன் சொல்ல போனால் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

இதற்கிடையில் அவருக்கு விபத்து ஏற்பட்டு தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அவர் புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார். அதாவது நடிகை யாஷிகா ஆனந்திற்கு பட வாய்ப்பு குறைந்ததால், தற்போது படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அதன்படி அவர் தயாரிப்பில் எடுக்கப்பட்ட முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. எனவே அந்த போஸ்டரை எஸ் ஜே சூர்யா வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

போராட்டம் நடத்தினால் இந்த சட்டம் பாயும்.., விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *