கல்யாணத்துக்கு NO சொன்ன காதலன் - பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மருத்துவ காதலி - வீடியோ வைரல்!கல்யாணத்துக்கு NO சொன்ன காதலன் - பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மருத்துவ காதலி - வீடியோ வைரல்!

Breaking News: கல்யாணத்துக்கு NO சொன்ன காதலன்: இன்றைய சமுதாயத்தில் தொடர்ந்து அநீதி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக காதலர்கள் ஒருவொருக்கொருவர் தாக்கிய சம்பவங்கள் தான் அதிகமாக  நடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் தற்போது ஒரு பெண் தனது காதலின் அந்தரங்க உறுப்பை அறுத்து எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மதுரா தொகுதியில் உள்ள வார்டு எண். 12ன் கவுன்சிலராக இருந்து வரும் நபரை பெண் மருத்துவர் ஒருவர் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தனது காதலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு காதலனை திருமணம் செய்ய கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி காதலி நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, காதலி கல்யாணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காதலி தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக தெரிகிறது.

Also Read: புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்? அப்டேட் கொடுத்த ரயில்வே அதிகாரி!

அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறை அந்த மருத்துவரை கைது செய்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *