இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். நம் நாட்டில் உள்ள 26 அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கொல்கத்தா அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. அது குறித்து சோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மையத்திலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் குறித்த மின்னஞ்சல் வந்துள்ளது.

இந்த 26 மையங்களில் தமிழகத்தில் நெல்லையில் மட்டும் ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 6 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNPSC தேர்வாணையம்.., லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட திருத்த விதிகள் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்த செய்தி அறிந்து தமிழகம் அல்லாமல் மற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

மின்னஞ்சல் வாயிலாக யார் இந்த மிரட்டல் செய்தியை பரப்பியது என்ற நோக்கிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது உண்மையா ? பொய்யா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அது குறித்த உண்மை நிலவரம் சோதனைக்கு பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN WHATSAPP CHANNEL

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *