பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் - அதிர்ச்சியில் கர்நாடக அரசு !பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் - அதிர்ச்சியில் கர்நாடக அரசு !

பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு புகழ் பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கர்நாடகா முதல்வர்க்கு மின்னஞ்சலில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் மீண்டும் குண்டு வெடிக்கும் என முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்ததில் 10 த்திற்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்ததது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

இந்த நிலையில் கோவில், ஹோட்டல், பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழும் என மர்ம நபர் மிரட்டியுள்ள சம்பவம் கர்நாடகா அரசு மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *