இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் - கைது செய்து காவல் துறை நடவடிக்கை !இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் - கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

தற்போது இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள், இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளரின் மகனான சிறுவன், வீட்டில் இளம் பெண் தனியாக இருக்கும் போது அவருக்குத் தெரியாமல் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்பு அதனை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆபாசமாகச் சித்தரித்த புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காட்டி அவரை மிரட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணை, மேலும் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இந்த ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் சிறுவன் தனது நண்பரான மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து இளம்பெண்ணிடம் ஆபாசமாக சித்தரித்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். boys misbehave a 18 years young girl using AI technology

கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு ! 4 பேர் ராஜினாமா செய்ய மறுப்பு என தகவல் – யார் யார் தெரியுமா ?

அந்த வகையில் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

மேலும் விசாரணையில், இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரை மிரட்டி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதன் பின்னர் சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *