தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம் ! வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க ! சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு !தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம் ! வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க ! சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு !

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம். சென்னை பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் நடைபெற இருப்பதால் அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.

அத்துடன் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது – தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

இதனுடன் குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்திலிருந்து மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் புறநகர் ரெயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *