Home » செய்திகள் » இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் - ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

தற்போது இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அடையாள அட்டையானது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும்,

மேலும் இந்த அடையாள அட்டை ஆதார் அட்டை போல் இருக்கும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு அடையாள அட்டை மூலம் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை விவசாயம் செய்யகூடிய மக்கள் எளிதில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய விவசாயிகள் பற்றிய தனிப்பட்ட தரவுகள் துல்லியமாக இல்லாத காரணத்தால் அந்த குறையை போக்கும் வகையில் இந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டை திட்டம் இருக்கும் என்றும்,

மேலும் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் முதல் விவசாயிகளின் பெயர் பதிவு செய்யும் பணி தொடங்கும் என்றும்,

அதன் படி இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் !

இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தற்போது இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அதன் மூலம் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டத்தின் பயன்களை விவசாயிகள் எளிதில் பெற வழிவகுக்கும் என்றும் டெல்லியில் நடந்த வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் வேளாண் துறை செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top