நிலவு பூமியை தாக்கினால் பூமி அழிந்து விடுமாநிலவு பூமியை தாக்கினால் பூமி அழிந்து விடுமா

                   சூரியகுடும்பத்தில் இருக்கின்ற பூமியில் இருந்து நிலவு சுமார் 3,84,400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. நிலவானது பூமியின் மீது மோதாமல் இருக்க ரோச் ஏரியா பாதுகாத்து வருகின்றது. அதையும் மீறி நிலவாது ரோச் ஏரியா மீது மோதினால் நிலவு சிறு சிறு பாறைகளாக உடையப்பட்டு பூமியின் மீது விழும் போது பூமியின் பல பகுதிகள் அழியும் நிலை ஏற்படுகின்றது. நிலவு பூமியை தாக்கினால் பூமி அழிந்து விடுமா. ஆனால் முக்கிய தகவல் என்னெவென்றால் நிலவானது பூமியில் இருந்து விலகிக்கொண்டே வருகின்றது இதன் காரணமாக நிலவு பூமியின் மீது தாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.

நிலவு பூமியை தாக்கினால்

நிலவு பூமியை தாக்கினால் பூமி அழிந்து விடுமா !

சூரியக்குடும்பம் :

 சூரியக்குடும்பமானது எட்டு பெரிய கோள்களையும் ஒரு சிறிய கோள்களையும் கொண்டு இருக்கின்றது.

  பெரிய கோள்கள் :

 1. புதன் 

 2. வெள்ளி 

  3. பூமி 

 4. செவ்வாய் 

 5. வியாழன் 

 6. சனி 

 7. யுரேனஸ் 

 8. நெப்டியூன் 

சிறிய கோள்கள் :

1. புளூட்டோ 

பூமி கோளின் சிறப்புகள் :

 பூமி கோள் வளிமண்டலத்தில் உருவாக்கி 4.45பில்லியன் ஆகின்றது. சூரியகுடும்பத்தில் இருக்கின்ற கோள்களில் மூன்றாவது பெரிய கோளாக பூமி இருந்து வருகின்றது. சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் பூமி இருக்கின்றது. பூமி கோளில் தான் மனிதர்கள் , பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான நீர் , ஓசோன் படலம் இருப்பதால் போதுமான அளவு வெளிச்சம் , ஆக்சிஜன் போன்றவைகள் கிடைக்கின்றது. நிலவு பூமியின் துணை கோளாய் இருந்து வருகின்றது.

பூமியின் துணை கோளாய் நிலவு உருவானது எப்படி ?

  சூரியகுடும்பத்தில் இருக்கின்ற கோள்களாகிய பூமியும் செவ்வாயும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மோதிய போது ஏற்பட்ட துகள்கள் மற்றும் வாயுக்கள் எல்லாம் சேர்த்து சந்திரன் என்னும் பூமியின் துணை உருவாக்கியது. இதனை நிலவு , மதி , நிலா மற்றும் திங்கள் என பல பெயர்களை கொண்டு அழைக்கப்படுகின்றது. நிலவு பூமியில் இருந்து சுமார் 3,84,403 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டு பூமியை சுற்றி வருகின்றது. பூமி கோள்களை தவிர்த்து மனிதன் கால் பதித்த ஒரே கோளாய் நிலவு இருக்கின்றது. இந்த வரலாற்று சாதனையை செய்தவர் நில் ஆம்ஸ்ட்ராங் ஆவர். நிலவில் நீர் இருக்கின்றது என்பதை சந்திராயன் 1 கண்டு பிடித்தது. 

Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மூளையும் சேர்ந்து பாதிக்கப்படும் அபாயம்  ! 

நிலவின் பயன்கள் :

1. இரவு நேரத்தில் பூமிக்கு தேவையான வெளிச்சத்தினை கொடுக்கின்றது. 

2. கடல் அலைகள் எழுவதற்கு நிலவின் ஈர்ப்பு விசை உதவுகின்றது.

3. பூமியானது 23.5 டிகிரி செல்ஸியஸில் சுற்றி வருவதற்கு நிலவு உதவுகின்றது.

  4. பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் பூமியில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு நிலவு காரணமாக இருக்கின்றது.

நிலவு பூமியின் மீது மோதினால் என்ன நிகழும் ! :  

 நிலவு பூமியில் இருந்து 3,84,403 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. நிலவானது காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியை நோக்கி நெருங்கி வரும் போது அல்லது பூமியின் மீது மோதும் போது பூமி அழிவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. நிலவு பூமியின் மீது மோதும் போது ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வோம்.

1. சுனாமி ஏற்படும் :

நிலவு பூமியை நோக்கி நெருங்கி வரும் போது கடலின் அலைகள் 30 ஆயிரம் அடி வரையில் உயரும் நிலை ஏற்படலாம். ஒரு நாளில் மட்டும் 10 முறைகளுக்கும் அதிகமாக சுனாமி பேரலைகள் பூமியின் பல இடங்களில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. 

2. நேரம் குறையும் :

 ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கின்றது. நிலவு பூமியை இன்னும் அருகில் நெருங்கி வர வர பூமி சூரியனை சுழற்சி வேகம் அதிகமாக இருக்கும். இதனால் ஒரு நாளைக்கு 24 நேரம் என்பது குறைவாக இருக்கும். 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட கிளிக் செய்யவும்

 3. பூமியை சூழும் பணி :

நிலவு பூமியை நெருங்க நெருங்க பூமியின் வெப்பநிலை குறைந்து பூமியை பணி சூழும் நிலை ஏற்படும். 

இந்த மாற்றங்கள் எல்லாம் பூமியின் ரோச் ஏரியாவின் அருகில் வரும் வரையில் நடக்கும். 

ரோச் ஏரியா என்றால் என்ன :

ரோச் ஏரியா என்பது பூமியில் இருந்து சுமார் 15,470 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பகுதியை ரோச் ஏரியா என்பர். பூமியின் மீது எந்த ஒரு கோளும் மோதாமல் ரோச் ஏரியா இருந்து வருகின்றது.

நிலவு ரோச் ஏரியா மீது மோதினால் என்ன நிகழும் :

நிலவு பூமியை நோக்கி நெருங்கி வர பூமியில் பல இயற்கைக்கும் மீறிய பல மாற்றங்கள் நிகழும். மேலும் இவை ரோச் ஏரியா மீது மோதும் போது நிலவு பல பாறை துகள்களாக சிதறுகின்றது. சிதறிய பாறைத்துகள்கள் பூமியின் தொலைவில் இருக்கும் ரோச் ஏரியாவை சுற்றி வருகின்றது. சிதறிய கோளாகிய நிலவிற்க்கு ஈர்ப்பு விசை என்பது இருக்காது. எனவே இவைகள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது ஒவ்வரு பாறை துகள்களாக விழுகின்றது. பூமியின் மீது நிலவின் பாறைகள் விழும் போது பூமியின் பல பகுதிகள் அழிவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.  

பூமி அழிந்து விடுமா

நிலவு பூமியை தாக்கினால் பூமி அழிந்து விடுமா !

பூமியில் இருந்து விலகும் நிலவு :

நிலவானது பூமியில் இருந்து பல லட்சம் கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கின்றது. ஆனால் நிலவானது 2 முதல் 3.7 சென்டிமீட்டர் தூரம் வரையில் விலகிக்கொண்டே வருகின்றது. இவ்வாறு பூமியில் இருந்து விலகி வருவதால் நிலாவது பூமியின் மீது மோதுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது தெரிய வருகின்றது.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *