சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து - ஒரே நொடியில் போன உயிர்!!சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து - ஒரே நொடியில் போன உயிர்!!

Breaking News: சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து: தமிழகத்தில் விபத்து என்பது சர்வ சாதாணரமாக மாறிவிட்டது. ஏனென்றால் தொடர்ந்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள வடபழனி அருகே ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, சென்னையில் சுகனேஷ்வரன் என்ற 12 ஆம் வகுப்பு மாணவர் தனது நண்பர்களை பார்ப்பதற்காக அம்மாவின் டியோ பைக்கை எடுத்து சரியாக இரவு 10 மணிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த அம்மா மாணவனின் நண்பனை தேடி சென்றுள்ளார்.

இதற்கிடையில்  சென்னை வடபழனி மெட்ரோ மேம்பாலம் அருகே சுகனேஷ்வரன் சென்ற போது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. accident in tamilnadu

Also Read: உலகின் சக்திவாய்ந்த பணம் உள்ள நாடு எது தெரியுமா? அப்பேற்பட்ட அமெரிக்கா எத்தனையாவது இடம்?

மேலும் அந்த பைக் ஓட்டும் போது, அந்த மாணவன் ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஓட்டி வந்ததால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவனுடைய நண்பர்கள் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த போது சுகனேஷ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். bike accident

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *