TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை - சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை - சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!

Breaking News: TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை: சென்னையின் முக்கிய பகுதியான கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படி இருக்கையில் அந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் பைக்கை ஓரமாக நிறுத்தி அங்கு இருந்து குதித்துள்ளார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து அந்த இளைஞன் குதித்தால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனே அங்கிருந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த  போலீஸ் அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இளைஞனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரிக்க தொடங்கினர்.

மேலும் போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ்(23) என்று தெரிய வந்தது.

இவர் படிப்பையும் தாண்டி கிரிக்கெட் ஸ்போர்ட்ஸில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.

இதனால் அந்த இளைஞன் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டு தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

Also Read: பைக் டேங்கில் உட்கார்ந்து வைப் செய்த காதல் ஜோடி!! குண்டுகட்டாக தூக்கிய காவல்துறை!!

இப்படி இருக்கையில் அவர் எப்படியாவது தற்போது நடைபெற்று வரும் TNPL தொடரில் விளையாட வேண்டும் என்று மும்முரமாக இருந்து வந்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக செலக்ட் ஆகாத நிலையில், இந்த வட்டமும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக  மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனாலே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *