சென்னையில் 15 விமான சேவைகள்  பாதிப்பு - பயணிகள் கடும் அவதி!!சென்னையில் 15 விமான சேவைகள்  பாதிப்பு - பயணிகள் கடும் அவதி!!

தமிழகத்தில் சென்னையில் 15 விமான சேவைகள்  பாதிப்பு – பயணிகள் கடும் அவதி: தமிழகத்தில் கடந்த மாதம் கோடை வெயில் பல்ல காட்டி அடித்த நிலையில், தற்போது மக்கள் யாரும் எதிர்பாராத சமயத்தில் கனமழை1 பெய்து வருகிறது. குறிப்பாக இடி மின்னலுடன் பெய்யும் இந்த கனமழை சரியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் மழை பெய்து வருகிறது. நேற்று  கூட சென்னை, மதுரை, தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் சென்னையில் உள்ள விமான நிலையத்தில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இப்படி விடாமல் கனமழை பெய்து வந்ததால் சென்னை விமான நிலையத்தில்  விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்ததால் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் கனமழை ஓய்ந்த பிறகே விமானம் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. 

  1. weather report news in tamil ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *