சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ., SMSல் பறந்த செய்தி.., பீதியில் மாணவர்கள் - பெற்றோர்கள் - போலீஸ் அதிரடி!!சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ., SMSல் பறந்த செய்தி.., பீதியில் மாணவர்கள் - பெற்றோர்கள் - போலீஸ் அதிரடி!!

சமீப காலமாக சென்னையில் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் முக்கிய பகுதிகளான பாரிமுனை, கோபாலபுரம், அண்ணா நகர்,  ஆர்.கே.புறத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த செய்தி பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் பதறி  தங்களது பிள்ளைகளை பள்ளியில் இருந்து கூட்டி சென்று விட்டனர்.

இது குறித்து சென்னை போலீஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னையில் உள்ள ஒரு சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த செய்தி மின்னஞ்சல்கள்  அனுப்பிய குற்றவாளியை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். இதற்கிடையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். மேலும் பொதுமக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர். 

என்னது.., பாகுபலி பிரபாஸ் இல்லையா?.., அனுஷ்காவுக்கு ஜோடி சேரும் முக்கிய பிரபலம்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *