சென்னை சைக்ளோத்தான் போட்டி 2024 - நாளை ECR வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது !சென்னை சைக்ளோத்தான் போட்டி 2024 - நாளை ECR வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது !

நாளை சென்னை சைக்ளோத்தான் போட்டி 2024 நடைபெற உள்ள நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை (அக்.6) காலை 05.00 மணி முதல் காலை 10.00 மணிவரை செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழக விளையாட்டு ஆணையம் மற்றும் HCL என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைக்ளோத்தான் 2024 போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த சைக்ளோத்தான் போட்டி கானத்தூர் ரெட்டிகுப்பம் கிராமம் மாயாஜால் திரையரங்கம் முதல் மாமல்லபுரம் கிராமம் தனலட்சுமி ஸ்ரீனிவாச கல்லூரி வரை வந்து “ப” வளைவில் திரும்ப மாயாஜால் செல்ல உள்ள காரணத்தினால் ECR சாலையில் எவ்வித வாகனங்களும் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதற்கு மாறாக பூஞ்சேரி OMR சாலை – அக்கரை இணைப்பு சாலையினை வாகனங்கள் செல்ல பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சைக்ளோத்தான் போட்டியின் போது உள்ளூர் வாகனங்களும் சாலையில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. Chennai cyclothon Competition 2024 – Vehicles will not be allowed through ECR tomorrow

மதுரையில் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி 2024 – பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

மேலும் சாலையில் கால்நடைகளை விடக்கூடாது என்றும், அத்துடன் கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் பந்தய நேரத்தில் விருந்தினர்கள் வந்து செல்ல அனுமதி கிடையாது.

போட்டி முடிந்த பின்னர் அதாவது காலை 10.00 மணிக்கு மேல் வழக்கம்போல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *