சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

தற்போது சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தேதிகளில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து மெரினா கடற்கரை, மவுண்ட்ரோடு, ஓமந்தூரார் பகுதியில் இந்த கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், இதற்காக சாலைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த அனுமதிக்க கூடாது என கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முதலில் கார் பந்தயம் நடத்த தடை விதித்த உயர்நீதிமன்றம் பின்னர் தமிழக அரசின் பதிலைக் கேட்டு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் அதிமுக தரப்பில் சென்னையில் கார் பந்தயம் நடத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த அனுமதிக்க கூடாது என அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்வழங்கியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் – பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் !

மேலும் இந்த வழக்கின் விசாரணையில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெறுமா என்பது குறித்து தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *