சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை. தற்போது ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பலர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் இழந்து வருகின்றனர். மேலும் இது போன்ற விளையாட்டுகளில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்த உடன் பெரும்பாலான நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் தற்போது சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரில் நடைபெற்றுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்தவர் மருத்துவ மாணவர் தனுஷ், மூன்றாம் ஆண்டு பிசியோதரப்பி படித்துவந்துள்ளார். அந்த வகையில் தினமும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதில் அதிகளவு பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து ரம்மி விளையாடி தான் இழந்த பணத்தை மீட்க தனது தந்தையிடம் ரூபாய் 24,000 பணம் கேட்டுள்ளார். ஆனால் தனுஷின் தந்தை தன்னிடம் பணம் இல்லை என்று கூறி வேறும் 4000 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் தனுஷ் தன்னுடைய அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

மேலும் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *