குடிநீரில் மனித மலம்..,, அப்பா இறப்புக்கு 2 வருஷமா பழிவாங்கிய மகன்.., சிசிடிவியை பார்த்து பதறிய குடும்பம்!!குடிநீரில் மனித மலம்..,, அப்பா இறப்புக்கு 2 வருஷமா பழிவாங்கிய மகன்.., சிசிடிவியை பார்த்து பதறிய குடும்பம்!!

தந்தையின் இறப்புக்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் காரணம் என்று கூறி மகன் செய்த காரியம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவொற்றியூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண செட்டி நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் மனைவி சங்கீதா மற்றும் 2 மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து  கடந்த 6 மாதங்களாக மோகன் குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் வந்துள்ளது. இதனால் மோகன் மனைவி தனது வீட்டை சுற்றி கேமரா வைத்துள்ளார்.

இந்நிலையில் மோகனின் பக்கத்து வீட்டு காரர் எல்லப்பன் என்பவர் இரவு 12 மணியளவில் மோகன் வீட்டு குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து வைத்துள்ளார். இதை பார்த்த மோகன் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அவரிடம் எழுதி வாங்கி ஜாமீனில் விடுவித்தனர். மேலும் எல்லப்பனின் மைத்துனர் ரவுடி என்பதில் புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த இரண்டு குடும்பங்களுக்கும் பல வருடங்களாக பிரச்சனை போய் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் எல்லப்பன் தந்தை ஒரு கார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அந்த முன்விரோதம் காரணமாக தான் மோகன் குடும்பத்தை பழிவாங்க 2 ஆண்டுகளாக குடிநீரில் மலத்தைக் கலந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விஜய் அரசியல் வந்த நான் பதுங்கனுமா? கோட்னா ஆடு தான .. பிரியாணி போட்டுருவேன்.., தளபதியை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *