சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதறிய பெற்றோர்கள்!!சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதறிய பெற்றோர்கள்!!

Bomb threat 2024 சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சமீப காலமாக வெடிகுண்டு1 சம்பந்தமான செய்திகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிகமாக அச்சத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருக்கும் சில முக்கியமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதாவது சென்னை அருகே கொளப்பாக்கத்தில் இருக்கும் ஒமேகா என்ற தனியார் பள்ளிக்கு தான் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. Bomb threat 2024 – tamilnadu news – chennai news

Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  1. வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *