ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - வளைகாப்புக்கு போகும் நடந்த கொடூரம்!ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - வளைகாப்புக்கு போகும் நடந்த கொடூரம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: தென்காசி நல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  தற்போது கஸ்தூரி  7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனவே அவருக்கு வளைகாப்பு விசேஷம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி கஸ்தூரியை அழைத்து கொண்டு தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் பேசி சிரித்து கொண்டு வந்த கஸ்தூரிக்கு உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது வாந்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் படிக்கட்டில் நின்று கொண்டு வாந்தி எடுக்கும் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து  இந்நிலையில், கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கில் செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி வெற்றி பெற்ற “ரேபரேலி” தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி – காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *