தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது - தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது - தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், மேலும் வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொது பார்வையாளர்கள் தமிழகம் வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்கள் அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் வாக்கு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன்பு தபால் வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 – இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் – லிங்க் இதோ !

அத்துடன் வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *