காதலியை கர்ப்பமாக்கிய காதலன்.., அத்தை செய்த காரியம்.., உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி!!காதலியை கர்ப்பமாக்கிய காதலன்.., அத்தை செய்த காரியம்.., உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி!! காதலியை கர்ப்பமாக்கிய காதலன்.., அத்தை செய்த காரியம்.., உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி!!

உயிருக்குப் போராடும் மாணவி

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் காதல் என்ற பேரில் கல்யாணத்திற்கு முன்பே சில தவறுகள் செய்கின்றனர். அப்படி அதன் விளைவை உணராமல் ஒரு மாணவி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் என்ற பாட்டியுடன் பேத்தி வசித்து வந்துள்ளார். மேலும் ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த அவர் அங்கு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இதனை தொடர்ந்து அந்த மாணவியை பார்க்க அவருடைய அத்தை சென்றபோது, அவரின் உடல்நிலை கொஞ்சம் மோசமாக இருப்பதை கண்ட அவர் உடனே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

எனவே இது குறித்து அத்தை விசாரித்த போது, தனது காதலன் ராம் குமார் தான் காரணம் என்று கூற, கருவை கலைக்க இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருடைய கருத்தரிக்காமல் இருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனே அரசு மருத்துவர்கள் போலீசில் தகவல் கொடுத்த நிலையில், உயிருக்கு போராடும் மாணவிக்காக மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி அவரின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இன்னும் ஷூட்டிங்கே முடியல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., லியோ படத்தை தூக்கி சாப்பிட்ட கோட் – தளபதினா சும்மாவா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *