நீதி வேண்டும்?.., தனியார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு., போராட்டத்தை கையில் எடுத்த மாணவர்கள்!நீதி வேண்டும்?.., தனியார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு., போராட்டத்தை கையில் எடுத்த மாணவர்கள்!

பாலியல் குற்றசாட்டு

தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது மாதிரியான விஷயங்களுக்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முதல்வர் பாலியல் செய்வதாக கூறி, மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் அருகே உள்ள கொண்டனாம்பட்டி பகுதியில் செளடேஸ்வரி என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதுமட்டுமின்றி 80 ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் முதல்வராக இருந்து பாலாஜி என்பவர் அங்கு படித்து வரும் பி.எச்.டி மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த நிலையில், வழக்கம் கல்லூரிக்கு வந்த பாலாஜியை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி அவருக்கு தண்டனை கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

வாகன ஓட்டிகளே உஷார்.., இதை செய்யலனா?.., ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்?.., அரசு அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *