நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் - தேர்தல் நேரத்தில் இப்படியொரு வழக்கா? கொந்தளித்த ரசிகர்கள்!!நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் - தேர்தல் நேரத்தில் இப்படியொரு வழக்கா? கொந்தளித்த ரசிகர்கள்!!

நேற்று வெளியான கோட் படத்தின்  ‘விசில் போடு’ பாடல் தொடர்பாக நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியீட்டு இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் நேற்று வெளியான  ‘விசில் போடு’ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பாடல் வரிகளில் சில மது தொடர்பான வார்த்தைகளும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் லியோ பட பாடல் வெளியான போது எழுந்த சர்ச்சை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புகாரில், ” நடிகர் விஜய் பிரச்சினையை தூண்டும் விதமாகவும், போதை பொருட்களை ஆதரிக்கும் விதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ படம் கோட் படம் வரை போதைப் பொருளை ஆதரிக்கும் வகையில் பாடல் பாடி வெளியீட்டு வருகிறார். அவர் பாடும் பாடலின் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுப் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார் என்று புகார் அளித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *