Home » செய்திகள் » காவல்துறையில் மொத்தம் 60,244 காலி பணியிடங்கள்.., புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

காவல்துறையில் மொத்தம் 60,244 காலி பணியிடங்கள்.., புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான  இளைஞர்கள் காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்று தங்களை உடல் ரீதியாகவும், தேர்வு ரீதியாகவும் தயார்படுத்தி வருகின்றனர். அப்படி தயாராகி வரும் தேர்வர்களுக்காகவே அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 60,244 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஒப்புதலை உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கி இருப்பதாக ஆட்சேர்ப்பு வாரிய தலைவர் ரேணுகா மிஸ்ரா கூறியுள்ளார்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து பணியிடங்களை நிரப்பாமல் இருந்து வருவதை கருத்தில் கொண்டு, 22 ஆக இருந்த வயது வரம்பை தற்போது 25 ஆக உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜனவரி 16ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட இருப்பதாக ஆட்சேர்ப்பு வாரிய தலைவர் ரேணுகா மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top