இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் - நீதிமன்றம் கொடுத்த அதிரடி டிவிஸ்ட்!!இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் - நீதிமன்றம் கொடுத்த அதிரடி டிவிஸ்ட்!!

ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்பா மையங்களில் ஆண்கள், பெண்கள் என மசாஜ் செய்து கொள்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி அரசால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறி பல்வேறு ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்கின்றனர். இந்நிலையில் ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது விசாரித்த நீதிபதி, ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே இந்த வழக்கின் முடிவு தெரியும் வரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட அந்த மனுவில், ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை டெல்லி மகளிர் ஆணையத்துடன் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

மாணவர்களே – தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *