Home » சினிமா » இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் தற்போது துருவ் விக்ரம் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்

மேலும் இந்த திரைப்படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். அத்துடன் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தற்போது ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ போன்ற படங்கள், அடுத்து இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top