சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு... இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு... இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?

International cricket 2024: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு: கிரிக்கெட்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரராக இருந்து வருபவர் டேவிட் வார்னர். கடந்த 2009 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இது வரை இவர் 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 6,932 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  49 சதங்களும், 98 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இதற்கிடையில் 2018 ஆம் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கிய அவருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதித்தது. இதனை தொடர்ந்து தடை காலம் முடிந்த பிறகு தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் 37 வயதான டேவிட் வார்னர் சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்துள்ளார். cricket news – indian cricket news in tamil – Australia cricket – david warner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *